சங்ககிரி அருகே உள்ள கொங்கணாபுரம் அறக்கட்ட ளையின் சார்பில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிதியாக ரூ.10 ஆயிரத்தை அறக்கட்டளையின் நிர்வாகிகள் நாமக்கலில் உள்ள தமிழ்நாடு பொறுப்பாளரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
கொங்கணாபுரம் அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் ஆயிக்கவுண்டன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
அதனையடுத்து, நாமக்கல் காந்தி நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்நாடு பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு மேலவை உறுப்பினர் எஸ்.முத்துசாமியிடம் ரூ.10 ஆயிரத்தை கொங்கணாபுரம் அறக்கட்டளை முன்னாள் சங்க முன்னாள் நிர்வாக அறங்காவலர்கள் கே.காசிராஜன், ஆ.மு.ஜெகநாதன், பொருளாளர் சி.மணி, நிர்வாக அறங்காவலர் எஸ்.மணிசங்கர், கொங்கணாபுரம் ஏஜிஎன் மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் கதிர் ஆகியோர் வழங்கினர் .