தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில், தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பிப்.20 இல் நடத்திய பேரணியின்போது போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். இதில் பேரணியில் கலந்து கொண்ட பலரும் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தடியடி நடத்துவதற்கு காரணமாக இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.