காவேரிப்பட்டணம் அருகே லாரியில் தீ:  ரூ.2 லட்சம் மருத்துவப் பொருள்கள் சேதம்

காவேரிப்பட்டணம் அருகே லாரியில் ஏற்பட்ட தீயால் ரூ.2 லட்சம் மருத்துவப் பொருள்கள் சேதமாயின.

காவேரிப்பட்டணம் அருகே லாரியில் ஏற்பட்ட தீயால் ரூ.2 லட்சம் மருத்துவப் பொருள்கள் சேதமாயின.
சேலம் மாவட்டம்,  ஒமலூர் அருகே உள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.மணி (45),  கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மருத்துவப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி வழியாக மதுரையை நோக்கி வெள்ளிக்கிழமை சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜகதாப் அருகே சென்றபோது,  லாரியில் புகை வருவதை கண்ட பொதுமக்கள்,  லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை சாலையோரமாக நிறுத்தினார்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் சேதமாயின. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com