சர்வதேச-தேசிய ஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ராசிபுரம் கீரனூரில் வெற்றி விகாஸ் - ஸ்ரீசைதன்யா கல்வி குழுமப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் சர்வதேச அளவிலான ஆங்கில ஒலிம்பியாட் தேர்வில் தங்கப் பதக்கம் வென்றும், அகில இந்திய அறிவியல் ஒலிம்பியாட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஒலிம்பியாட் தேர்வுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.குணசேகரன், தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், செயலர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசன், பொருளாளர் பழனிவேலு, தாளாளர் ஜி.விஜய், இயக்குநர்கள் துரைசாமி, சந்திரசேகரன், மாரிமுத்து, ரவி, தாசப்பிரகாசம், ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனங்களின் துணை பொது மேலாளர் சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத், துர்க்க பிரசாத், நரசிங்க ராவ், தலைமையாசிரியர்கள் ஜேம்ஸ் டேனியல் அற்புதராஜ், ரம்யா ராணி, ஜெ.சுதர்சனா ஆகியோர் வாழ்த்தினர்.