தம்மம்பட்டி சிவன் கோயில் உண்டியல் எண்ணப்பட்டது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் உண்டியல் எண்ணப்பட்டது. உண்டியலில் ரூபாய், நாணயங்கள் எண்ணப்பட்டதில் ரூ.95 ஆயிரம் இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் கோயில் உண்டியல் எண்ணப்பட்டுள்ளது.