வாழப்பாடி காவல் ஆய்வாளராகத் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணிபுரிந்த உமாசங்கர், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கருமந்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்தநிலையில், எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வாழப்பாடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.