வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஓமலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஓமலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நான்கு பவுன் தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகவனேஸ்வரன். இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாடி கட்டடம் வீடு உள்ளது. இந்தநிலையில், சுகவனேஸ்வரன்குடும்பத்தினர் வழக்கம் போல இரவு உணவருந்திவிட்டு கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மேல் தளத்தில் உள்ள வீட்டில் படுத்து உறங்கிவிட்டனராம். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை எழுந்து கீழ் தளத்துக்கு வந்து கதவைத் திறக்க முற்பட்ட போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் அனைத்தும் கீழே போடப்பட்டிருந்தன.மேலும் பீரோவில் பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் தங்க நகைகள் மற்றும் ஐந்தாயிரம் பணத்தைத் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திருட்டு சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியில்உள்ள மேலும் இரண்டு வீடுகளின் கதவை உடைக்க முற்பட்டுள்ளதும் தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்த ஓமலூர் போலீஸார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com