சொத்தைப் பிரித்துக் கேட்ட மகன் அடித்துக் கொலை: தந்தை கைது

தாரமங்கலம் அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு மது போதையில் வெட்ட முயன்ற மகனை தந்தையே அடித்துக் கொலை செய்தார்.

தாரமங்கலம் அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு மது போதையில் வெட்ட முயன்ற மகனை தந்தையே அடித்துக் கொலை செய்தார்.
தாரமங்கலம் பேரூராட்சி நான்காவது வார்டு, சின்னாகவுண்டம்பட்டியில் வசிப்பவர் விவசாயி பொன்னுசாமி (60). இவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது இளைய மகன் பொன்னுமணி (28), மைக் செட் வைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பொன்னுமணி தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மனைவி பிரியா இரண்டு குழந்தைகளுடன் சித்தனூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.
இந்த நிலையில், பொன்னுமணி தினமும் மது போதையில் வந்து தனது தந்தை பொன்னுசாமியிடம் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். அப்போது, தந்தை பொன்னுசாமி ஓர் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால், தனது காலத்துக்கு பிறகு அனைவரும் பிரித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அதிக போதையில் வந்த பொன்னுமணி, நிலத்தை பிரித்துக் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியை காட்டி அவரது தந்தையை மிரட்டியுள்ளார். மேலும், தந்தையை வெட்ட அவரை விரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை பொன்னுசாமி அருகே கிடந்த மண்வெட்டியை எடுத்து மகனின் தலையில் அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த பொன்னுமணி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தாரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொன்னுமணியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, மகனை அடித்துக் கொலை செய்த பொன்னுசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com