ஆட்டையாம்பட்டி அருகே தறித் தொழிலாளி அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் தறித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் தறித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 ஆட்டையாம்பட்டி முத்தனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோ.சக்திவேல் (43). தறித் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த க.சரவணன் (40) என்பவரும் நண்பர்கள் ஆவர். இதனிடையே சரவணனின் மனைவியும், சக்திவேலும் நெருங்கிப் பழகி வந்தனர் என தெரிகிறது. இதுதொடர்பான தகராறில் சரவணனின் மனைவி அவரைப் பிரிந்து சென்றதாகத் தெரிகிறது.
 இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் மணிகண்டன், கனகராஜ், சேட்டு ஆகியோர் புதன்கிழமை காலை சக்திவேலுவை காரில் சரவணின் வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து சரவணன் உள்ளிட்டோர் சக்திவேலின் உடலை காரில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் இறக்கி வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான நான்கு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com