ரோட்டரி மாவட்ட ஆளுநராக ஆத்தூர் ரவி நிர்மல் பிரகாஷ் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி சங்கங்களுக்கு மாவட்ட ஆளுநராக ஆத்தூரை சேர்ந்த ரவி கலர் லேப் உரிமையாளர் ஏ.நிர்மல் பிரகாஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி பன்னாட்டு இயக்குநர் பரத்பாண்டியா, மும்பை ஆளுநர் ஆஸிஸ் கங்குலி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் வர இருக்கும் ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.