ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர் 1,167 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தார். அந்த மாணவரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
மல்லியகரை அடுத்துள்ள ஈச்சம்பட்டி ராசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி மாணவர் 1,167 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மேலும் 1,157 மதிப்பெண்கள், 1146 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். இப்பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் 198 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பித்துள்ளார். 1,100 க்கு மேல் 10 பேரும்,1000 க்கு மேல் 40 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் 9-ஆவது வருடமாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவ,மாணவிகளை முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.