மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் தனியார் பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் தனியார் பள்ளி மாணவி பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நாகியம்பட்டி புதுக்குட்டையைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது மகள் ஐஸ்வர்யா (17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வெழுதினார். பொதுத் தேர்வில் மொத்தம் 740 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும், மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த ஐஸ்வர்யா, வீட்டில் தனியாக இருந்த போது விஷமருந்தியதுடன், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸார், அவரது உடலைக் கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com