தம்மம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தருமபுரியில் ஜூன்3-ஆம் தேதி மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற உள்ளதையடுத்து அதுதொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட, கெங்கவல்லி ஒன்றிய, தம்மம்பட்டி நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.