தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் மன்ற இணைச்செயலர் எஸ்டிஎஸ்.கனகராஜ், திமுக நகரச் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.குப்புசாமி, சங்கரன், சண்முகம், காங்கிரஸ் ராமமூர்த்தி, காசிலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலர் எஸ்.கே.சேகர், நிர்வாகிகள் டி.செந்தில்குமார், மாதேஸ்வரன், பாமக சத்ரியசாமிநாதன், நிர்வாகிகள் கருணாநிதி, சுரேஷ்குமார், மக்கள் நீதி மய்யம் நிர்வாகி ஆனந்தன், மதிமுக கதிர்வேல், சுரேஷ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி பெருமாவளவன், சமூக ஆர்வலர்கள் ராகவன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.