கெங்கவல்லி வட்டாட்சியராக சுந்தரராஜன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
கெங்கவல்லி வட்டாட்சியராக இருந்துவந்த வரதராஜன், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக மாறுதலாகி பொறுப்பேற்றதையடுத்து, சேலம் தெற்கு வட்டாட்சியராக இருந்துவந்த சுந்தரராஜன், மாறுதலாகி, கெங்கவல்லி வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
அவருக்கு மண்டல துணை வட்டாட்சியர் நல்லுசாமி, வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், சங்கரி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.