நாட்டாம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்ம

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நடைபெற உள்ளது.
சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் கிராமம்,  நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும்   விநாயகர்,  லிங்கேஸ்வரர், குருவாயூரப்பன்,  பிரம்மா, முருகன்  கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை கணபதி, மஹாலட்சுமி,  நவக்கிரக ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வாஸ்து சாந்தி, முதற் கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு காலை 7 மணிமுதல் 8 மணிக்குள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாட்டுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com