பெத்தநாயக்கன்பாளையத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி
வருகிறார்.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (24). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவ்யா (19) என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காவ்யா நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் கே. தொல்காப்பியன் அங்கு சென்று காவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் வழக்குப் பதியப்பட்டது. திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களே ஆவதால் ஆத்தூர் கோட்டாட்சியர் ம. செல்வன் விசாரித்து வருகிறார்.