ஆத்தூர் அக்ரஹாரம் வரசித்தி விநாயகர் கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி பெருவிழாவின் மூன்றாம் நாள் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்மனுக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதுபோல பெரியமாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜையில் பலர் கலந்து கொண்டனர்.