தம்மம்பட்டி உப்பாத்துக்காடை அருகே பெருமாள் மலையில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சுவாமிக்கு அனைத்துவித அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கோயில் வழிபாட்டில் பங்கேற்க தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, கோனேரிப்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து சுமார் பத்தாயிரம் பேர் மலையேறி வந்து சுவாமி வழிபாடு செய்தனர்.
அதுபோல் தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்றது.