ஆத்தூர் வட்டம் குடகு பைத்தூர் ரோட்டில் உள்ள எல்ஆர்சி நியூ காந்தி நகரில் அமைந்துள்ள பத்ம ஸ்ரீ சாய்ராம், தருண கணபதி, ஆஞ்சநேய சுவாமி, தத்தாத்ரேயர் விமான கோபுர ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு சிறப்பு யாகம், மூல தேவதா ஹோமம், மகா தீபாரதனையோடு சிறப்பு கும்பாபிஷேம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை பத்ம ஸ்ரீ சாய்ராம் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி எல்.ஆர்.சி. ரவிசங்கர்,செயல் இயக்குநர் பி.கிரிபாபு மற்றும் செயல் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.