பூசாரி மீது தாக்குதல்:  3 பேர் கைது

பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பூசாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வாழப்பாடி பெரியசாமி நகரைச் சேர்ந்த  வெங்கடாசலம் (46), செல்வமுத்து மாரியம்மன் கோயில் பூசாரியாகப் பணியாற்றிவருகிறார்.
இவர் வியாழக்கிழமை இரவு பிள்ளையார் கோவில் சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்றார். அப்போது குழல் மின்விளக்குளை கழற்றிய பெரியார் நகரைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகன் விக்னேஷ் (23),  இந்திரா நகர் முருகேசன் மகன் சிவா (21) ஆகிய இருவரைத் தட்டி கேட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தனது நண்பர்களான சந்தோஷ்குமார் (22),  கலை தேவா ஆகிய இருவருடன் சேர்ந்து,
வெங்கடாசலத்தை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.  தடுக்கவந்த வடிவேலு என்பவரும் தாக்குதலுக்கு ஆளாகினார். புகாரின்பேரில் வாழப்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து,  விக்னேஷ், சிவா, சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  தலைமறைவான கலைதேவாவை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com