கொடைக்கானலில் குளு குளு சீசன்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குளுமையான சீதோஷண நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் குளு குளு சீசன்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் குளுமையான சீதோஷண நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந் நிலையில், செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. பிற்பகலில் ஏரிச்சாலை, செவண்ரோடு, நகராட்சி சாலை ஆகியப் பகுதிகளில் சிறிது நேரம் லேசான சாரல் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் மேக மூட்டமும் நிலவியது. இதனால் குளுமையான சீதோஷன நிலை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com