வத்தலகுண்டு அரசு போக்குவரத்து பணிமனை முன் வெள்ளிக்கிழமை தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வத்தலகுண்டு அரசு போக்குவரத்து எல்.பி.எப். சங்க பொதுச் செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். சிஐடியூ துணை பொதுச் செயலர் கே.கணேசன், ஏஐடியூசி மத்திய சங்க பொருளாளர் ஆர்.நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலகுண்டு அரசு போக்குவரத்து எல்.பி.எப். சங்க துணைச் செயலர் வி.தென்னவன் நன்றி கூறினார்.