ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் உள் அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன் கோட்டை, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.