பழனியில் பல்வேறு விநாயகர் கோயில்களில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பழனி சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மஹாதீபாராதனை நடைபெற்றது. இதே போல ரயிலடி பிரசன்ன விநாயகர் கோயில், மார்க்கெட் பட்டத்துவிநாயகர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் சங்கடசதுர்த்தி கொண்டாடப்பட்டது.