திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து, மின்கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாற்காலிக பணியாளர் உயிரிழந்தார்.
செங்குறிச்சி அடுத்துள்ள வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த மலையாண்டி மகன் தங்கராஜ் (35). மின் வாரியத்தில் தாற்காலிக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வல்லம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியின் அருகே மின்கம்பத்தில் தங்கராஜ் வெள்ளிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வடமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.