கொடைக்கானலில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் வெயில் நிலவிய நிலையில் மாலையில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கொடைக்கானல், பெருமாள்மலை, பாம்பார்புரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com