பழனியில் சனிக்கிழமை (ஆக. 19) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பழனி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.