மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைப்பு

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மூதாட்டியிடம்  நகை பறித்த இளைஞரை பிடித்து பொதுமக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மூதாட்டியிடம்  நகை பறித்த இளைஞரை பிடித்து பொதுமக்கள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 திண்டுக்கல் வேடப்பட்டி குருநகரைச் சேர்ந்தவர் சுல்தான் சேட். இவரது மனைவி தாஹீரா பீவி (65).  அதே பகுதியில் உள்ள கடைக்கு பால் வாங்க தாஹீரா பீவி சென்றார். அப்போது பின் தொடர்ந்த ஒரு இளைஞர், அவர் அணிந்திருந்த 2.5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.
 இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்.  பின்னர், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில்,  திண்டுக்கல் அடுத்துள்ள தோமையார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜ் (23) என்பது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்,  அவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com