மேலூர் இளம் பெண் சாவில் மர்மம்: திண்டுக்கல்லில் உறவினர்கள் சாலை மறியல்

மேலூரைச் சேர்ந்த இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

மேலூரைச் சேர்ந்த இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சேர்ந்த அஜ்மல்கானுக்கும்,  மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள சென்னகரம்பட்டியைச் சேர்ந்த தஸ்பிஹா பானு (22) என்பவருக்கும், 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், தஸ்பிஹா பானு திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக, மேலூரில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். இதனிடையே, திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆவதால், பழனி சார்-ஆட்சியர் வினீத் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, தஸ்பிஹா பீவியை அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், அஜ்மல்கானின் உறவினர்கள் பிரேதப் பரிசோதனை அறை அடுத்துள்ள பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்,  தற்கொலையை கொலையாக மாற்ற வலியுறுத்தி தஸ்பிஹாவின் உறவினர்கள் மறியலில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்தனர்.
இரு தரப்பினரையும் போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து, தஸ்பிஹாவின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com