பழனி அடிவாரம் அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில் அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயில். கிழக்கு கிரிவீதியில் உள்ள இக்கோயிலிலும், அடுத்துள்ள அருள்மிகு நினைத்ததை முடிக்கும் சின்னவிநாயகர் கோயிலிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் குடமுழுக்குப் பணிகள் துவங்கியது. பணிகள் முழுமை பெற்றதைத் தொடர்ந்து கடந்த மாதம் முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் அருள்மிகு அழகுநாச்சியம்மன், அருள்மிகு சின்னவிநாயகர் கோயில் விமானங்களுக்கு சமகாலத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் உதவி ஆணையர் மேனகா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.