பழனியை அடுத்த சின்னகலையமுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடியவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சின்னகலையமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (42). தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். புதன்கிழமை அருகேயுள்ள வீட்டில் துக்கநிகழ்ச்சி நடந்ததால் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றுள்ளனர். சிலமணி நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளையும், ரூ. 10 ஆயிரத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. பழனி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.