திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம், 9 இடங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளது:
கணவாய்ப்பட்டி(திண்டுக்கல் கிழக்கு), எல்லப்பட்டி (திண்டுக்கல் மேற்கு), வீரசிக்கம்பட்டி(ஆத்தூர்), நடகோட்டை (நிலக்கோட்டை), முளையூர்(நத்தம்), கொல்லப்பட்டி(ஒட்டன்சத்திரம்), பெருமாள்புதூர் (பழனி), மேல்பள்ளம்(கொடைக்கானல்), குளத்தூர்(வேடசந்தூர்) ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொண்டு, பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுவினை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.