வேடசந்தூர் அருகே வியாழக்கிழமை இரண்டு இரு வாகனங்கள் மோதிக் கொண்டதில், நூற்பு ஆலை மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள அய்யர்மடம் பகுதியில், குப்புசாமி என்பவருக்குச் சொந்தமான நூற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், உரிமையாளர் குப்புசாமியின் உறவினர் முத்துசாமி (54) என்பவர் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், ஆலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வேடசந்தூர் நோக்கி குப்புசாமி புறப்பட்டுள்ளார். மினுக்கம்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் பகுதியைச் சேர்ந்த செல்வம் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.