கொடைக்கானலில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

கொடைக்கானலில் நிகழ்ந்த திருட்டு வழக்கில், மதுரை,  சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கொடைக்கானலில் நிகழ்ந்த திருட்டு வழக்கில், மதுரை,  சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
       திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணாசாலைப் பகுதியில் உள்ள தேநீர் கடை மற்றும் மளிகைக் கடையில் சில நாள்களுக்கு முன் பணம் திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. முறையே, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ. 50ஆயிரம் என மொத்தம் ரூ. 65 ஆயிரம் திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
     இந்நிலையில், கொடைக்கானல் அப்சர்வேட்ரி பகுதியில் ரோந்து சென்ற போலீஸார், அங்கு அனுமதியில்லாத  விடுதியில் தங்கியிருந்த  4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொடைக்கானல் அண்ணாசாலையில் நடந்த திருட்டில் 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
     விசாரணையில், மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செல்வத் திருமால் (30), கொடைக்கானலைச் சேர்ந்த ராஜ்குமார் (33), விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த வெங்கடேஷ் (36) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கரூரான் என்ற பன்னீர்செல்வம் (30)  என்பது தெரியவந்தது.
இந்த 4 பேரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com