கொடைக்கானலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நகரத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலர் பாலன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோயில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவும், ஆலய சொத்துக்களை மீட்கவும், தமிழகத்தில் வழிபாடு நடத்தப்படாத கோயில்களில் வழிபாடு நடத்திடவும், ஆலயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.