திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து வாகனஓட்டுநர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் பாலதிருப்பதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(45). வாகன ஓட்டுநரான இவர், தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக திங்கள்கிழமை முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததால் பாதிப்படைந்த சரவணனை, உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.