அம்மையநாயக்கனூர் காவல்நிலைய பெண் சார்பு-ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த பெண் சிறப்பு சார்பு- ஆய்வாளர் மாரடைப்பால்  உயிரிழந்தார்.

அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த பெண் சிறப்பு சார்பு- ஆய்வாளர் மாரடைப்பால்  உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு- ஆய்வாளராக பணியாற்றியவர் பாலகாதேவி (51). இவர், வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் உயிரிழந்த பாலகாதேவிக்கு, தாமஸ் ஜெயச்சந்திரன் என்ற கணவரும், ஒரு மகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com