தமிழகத்தில் அதிமுக 4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்: காங். எம்எல்ஏ. வசந்தகுமார்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் நீடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த்குமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் நீடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த்குமார் தெரிவித்தார்.
 கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு இந்தியனாக இருந்தால் போதும்.
 தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராது. 4 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். குடிமராமத்துப் பணியில் குளங்களை தூர்வாருவதில் முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையுடன் செயல்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வசந்த்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் அப்துல்கனிராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஜூலை மாதம் திருநெல்வேலியில் நடைபெற உள்ள 115-ஆவது காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக முன்னாள் அமைச்சர் கக்கன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com