பழனி மலைக்கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விஞ்ச் நிலையம், ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். மேலும் மலைக்கோயிலில் கட்டண தரிசனம், இலவச தரிசனங்களிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு விரைவான தரிசனத்துக்கும், குடிநீருக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரவில் நடைபெற்ற தங்கத்தேர் புறப்பாட்டிலும் அவர்கள் பங்கேற்றனர்.