ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்றைய தினம் ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனை உதவி செயற்பொறியாளர் ஜே.விஜய் தெரிவித்துள்ளார்.