ஒட்டன்சத்திரம் அருகே நகை திருட்டு: 2 சிறுவர்கள் கைது

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நகையைத் திருடியதாக 2 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த நகையைத் திருடியதாக 2 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெரியகுழிப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (30). இவர் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு பவுன் மோதிரம் மற்றும் வெள்ளி மோதிரம், மெட்டி ஆகியவற்றை வைத்துவிட்டு வீட்டிற்குள் குளிக்கச்சென்றராம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நகையைத் திருடிச்சென்றதாக இடையகோட்டை காவல் நிலையத்தில் கனகராஜ் புகார் செய்தார்.
 இதையடுத்து 2 பேரையும் போலீஸார் விசாரித்ததில், அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்களாம். அவர்களிடமிருந்து திருடு போன பொருள்களை போலீஸார் மீட்டு, இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com