குடிநீர் எடுக்க மின் மோட்டார்: நத்தம் பேரூராட்சி எச்சரிக்கை

குடிநீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என நத்தம் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.  இப்பேரூராட்சியில் குடிநீர்

குடிநீர் எடுக்க பயன்படுத்தப்படும் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என நத்தம் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.  இப்பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில், வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மின் மோட்டார்களை உடனடியாக அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆய்வின் போது பிடிபடும் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com