பழனி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உலக ரத்தக்கொதிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் உதயக்குமார், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரத்தக்கொதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள், ரத்தக்கொதிப்பு வந்த பின் அதற்கான மருந்துகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மருத்துவர் உதயக்குமார் விவரித்தார். பொதுமக்களுக்கு இலவசமாக ரத்தக்கொதிப்பு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டன.