திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுவில் மகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
திருவிழாவில், முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை மாலை அருள்மிகு மகா பரமேஸ்வரி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பழைய வத்தலகுண்டு முக்கிய வீதிகளில் தேர் உலா வந்தது.
இந்நிகழ்ச்சியைக் காண வத்தலகுண்டு, நிலக்கோட்டை, குரும்பபட்டி, விராலிப்பட்டி, ரெங்கப்ப நாயக்கன்பட்டி, ஏ.வாடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து அம்மனைத் தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.