மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 9 பேருக்கான மாறுதல் ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 9 பேருக்கான மாறுதல் ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்திற்குள்ளான பணியிட மாறுதலுக்கு 22 பேர் பங்கேற்றனர். அதில் 8 பேர் மட்டுமே பணியிடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஒருவர் மட்டுமே கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பணியிடத்தினை தேர்வு செய்தார். பணியிடங்களை தேர்வு செய்த தலைமையாசிரியர்களுக்கு, பணி மாறுதலுக்கான ஆணையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com