பைக் மீது கார் மோதல்: பெண் சாவு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி சியமளா (47) தனது மகன் மோகனுடன் (24)

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி சியமளா (47) தனது மகன் மோகனுடன் (24) இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் கலிக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.
  இதில் பலத்த காயமடைந்த சியாமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்த மோகன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து, சின்னாளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com