பழனி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அருள்செல்வன் சிறப்புரையாற்றினார். பழனி நகரச் செயலர் குருசாமி, ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், இடது சாரி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.