கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் மலர்ச் செடிகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியை பார்த்து ரசிப்பதுடன், அதில் படகு சவாரி செய்தும் மகிழ்கின்றனர். இந்நிலையில் ஏரிப்பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள புல்தரைகளில் மலர்ச் செடிகள் நடும் பணி நடைபெற்றது. அப்போது கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா தலைமையில் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.