கொடைக்கானலில் கூடுதல் நேரம் மின்தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை கூடுதல் நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை கூடுதல் நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் வழக்கம் போல தினமும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5- மணி வரை கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்சார வாரியத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக மின் தடை நீடித்தது. தற்போது கொடைக்கானலில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் இந்த மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுவதாலும் அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே கொடைக்கானலில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com